21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார்.
கலைஞரின் இறுதி அஞ்சலியில் ஸ்டாலின் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் #MKStalin #NationalFlag #Marina #Marina4Kalaingar #MarinaForKalaignar #MarinaBeach #RIPKalaignar #RIPKarunanidhi #Karunanidhi #Karunanidhideath #DMK #KalaignarAyya pic.twitter.com/CpmjWH4bnf
— Dinakaran (@dinakaranonline) August 8, 2018
M #Karunanidhi's family pays last tribute to the DMK chief at Marina beach. Burial to take place shortly pic.twitter.com/hNIW5dkjOy
— ANI (@ANI) August 8, 2018
சந்தன பேழைக்குள் வைக்கப்படுகிறது கருணாநிதியின் உடல்
கருணாநிதியின் உடலுக்கு குடும்ப உறவுகள் கண்ணீருடன் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அண்ணா சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அண்ணா சதுக்கம் வந்தடைந்தது கருணாநிதியின் உடல், லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி.. ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இறுதிச் சடங்கு நடைபெறும் அண்ணா நினைவிடத்துக்கு முக ஸ்டாலின் வந்தார்.
தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக கனிமொழி அண்ணா நினைவிடம் வந்தார். உதயநிதி, அருள்நிதி போன்ற குடும்ப உறுப்பினர்களும் அண்ணா நினைவிடம் வந்தனர்.
அப்பாவுக்காக காத்திருக்கும் அழகிரி
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை மெரினா வந்தடைந்தது.
கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வந்துள்ளார்.
கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மெரினா கடற்கரை வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, திருநாவுக்கரசர் மற்றும் குஷ்பு, தங்கபாலு ஆகியோர் வந்துள்ளனர்.
அண்ணா நினைவிடத்திற்கு தமிழக ஆளுநர் வருகை
அண்ணா நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருப்பு
கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மக்கள் வெள்ளத்தில் கண்ணீர் கடலில் மிதந்து செல்கிறது கருணாநிதியின் உடல்
Chennai: Mortal remains of DMK Chief M #Karunanidhi being taken to #MarinaBeach for last rites. pic.twitter.com/0q6j5EOzPE
— ANI (@ANI) August 8, 2018
சென்னை ராஜாஜி அரங்கத்தில் இருந்து கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி அஞ்சலி!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில் தயார் நிலையில் இராணுவ வாகனம்!
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்
மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி
Congress President Rahul Gandhi pays tribute to M #Karunanidhi at #RajajiHall pic.twitter.com/yMph9VmZNV
— ANI (@ANI) August 8, 2018
ராஜாஜி அரங்கில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு
திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக பொலிஸ் திணறி வருகிறது.
தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்! - கருணாநிதியின் கல்லறை வாக்கியம்
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது..!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அண்ணா நினைவிடம் பின்புறம் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அண்ணா நினைவிடம் முன்பு குவியும் திமுக தொண்டர்கள்
Prime Minister Narendra Modi pays last respects to former CM M #Karunanidhi at Chennai's Rajaji Hall. #TamilNadu pic.twitter.com/IlO5LpP93F
— ANI (@ANI) August 8, 2018
நடிகர்கள் வடிவேலு, விஜய் சேதுபதி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
#TamilNadu: PM Narendra Modi arrives in Chennai to pay last respects to DMK chief M #Karunandhi. pic.twitter.com/6FWth7AZnZ
— ANI (@ANI) August 8, 2018
கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கிருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஜானகியம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது- அரசு தரப்பு
— Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2018
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் அஞ்சலி!
கருணாநிதி மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது; திமுக இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறது- தமிழக அரசு வாதம்
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முதல்வராக இருப்பவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை; அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்வதே சிறந்தது!- திமுக தரப்பு வாதம்
முன்னாள் முதல்வர்கள் சாமதி அமைக்க இடம் ஒதுக்குவதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை, இறந்த நபரின் முக்கியத்துவத்தை கருதி மாநில அரசே முடிவெடுக்கலாம்- திமுக தரப்பு வாதம்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஜெ.தீபா, மாதவன் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி
ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு தொண்டர்கள்.
அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜாஜி ஹாலில், கருணாநிதியின் உடலை பார்த்து கதறி அழுதார் வைரமுத்து
திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி நேரில் அஞ்சலி
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு. மேலதிக தகவலுக்கு
கருணாநிதி உடலுக்கு நடிகர் சிவக்குமார், மகன் சூர்யா அஞ்சலி செலுத்தினர்.
கலைஞரின் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை, கீழவை நீதிமன்றங்களும் இயங்காது என பதிவாளர் சக்திவேல் அறிவிப்பு
கருணாநிதியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்திய போது மெரினாவில் இடம்கேட்டு தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
கருணாநிதியின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி, அதிமுக அமைச்சர்களும் உடனிருந்தனர்.
கலைஞரின் உடலுக்கு நடிகர் ராதாரவி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
You may have left this earth but your infectious passion and love for Tamizh will stay and reflect with us forever…Deep Respect ! #Karunanidhi
— A.R.Rahman (@arrahman) August 7, 2018
கலைஞரின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பேழையில் அவரது மறைவுச் செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழும் வைக்கப்பட்டுள்ளது!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜாஜி ஹாலுக்கு வருகை
"வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்..!" முழக்கத்துடன் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்ட கருணாநிதியின் உடல்.
அண்ணா சிலை, பெரியார் சிலை, அண்ணா மேம்பாலம், புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட தான் நிறுவிய பகுதிகள் வழியாக ராஜாஜி அரங்கத்தை நோக்கி தனது இறுதிப்பயணத்தில் கலைஞர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் இரங்கல் டுவிட்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
— Maithripala Sirisena (@MaithripalaS) August 7, 2018
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்னை வந்தடைந்தார்.
கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவரது பக்கத்தில் போடப்பட்ட டுவிட்
தமிழினத் தலைவர். pic.twitter.com/COeaKSAJIF
— KalaignarKarunanidhi (@kalaignar89) August 7, 2018
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் நாளை அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு.. மேலதிக விபரங்களுக்கு
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது.
கலைஞருக்குக் கடற்கரையில்
— வைரமுத்து (@vairamuthu) August 7, 2018
இடம் கொடுங்கள்.
சட்டத்தைப் பார்க்காதீர்கள்; அவர்
சரித்திரத்தைப் பாருங்கள்.#Marina4Kalaignar #Kalaignar #Karunanidhi
ஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்பார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரது தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது
My thoughts are with the family and the countless supporters of Karunanidhi Ji in this hour of grief. India and particularly Tamil Nadu will miss him immensely. May his soul rest in peace. pic.twitter.com/7ZZQi9VEkm
— Narendra Modi (@narendramodi) August 7, 2018
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் வீட்டிற்கு கருணாநிதி தாய், தந்தையின் புகைப்படம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கலைஞர் டிவி நேரலை நிகழ்ச்சிக்கு தயாராகும் வேலையில் இறங்கி உள்ளது.
நேரலையில் ஒளிபரப்பக்கூடிய உபகரணங்களும் வீட்டு வாயிலின் முன்பு இறக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.
Kalaignar TV sets up outside #Karunanidhi ‘s Gopalapuram residence even as supporters slowly gather. pic.twitter.com/h16bdPxJvz
— Anna Isaac (@anna_isaac) August 7, 2018
கோபாலபுரம் வீட்டிற்குள் கதறி அழுத படி சென்ற மகள் செல்வி-- மேலதிக தகவல்களுக்கு
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. அறிவுறுத்தி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
#BREAKING | கலைஞர் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை #KauveryHospital #KarunanidhiHealth #Kalaingar #Karunanithi #DMK #kalaingarKarunanidhi #Karunanidhi #Kalaingar #கலைஞர் #கருணாநிதி #sunnews pic.twitter.com/OJgBxAZAQi
— Sun News (@sunnewstamil) August 7, 2018
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு, இவருடன் மு.க.அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உள்ளனர்.
அறிக்கை வெளியாகும் முன்னரே தயாரான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. மேலதிக தகவல்களுக்கு
கருணாநிதி பற்றிய அறிக்கையில் நேற்றிரவு முதலே காவேரி மருத்துவமனை முன் குவியத் தொடங்கினர். “எழுந்து வா தலைவா” “அறிவாலயம் செல்வோம்” என்றபடி கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
காவேரி மருத்துவமனையில் 10வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சவாலான நிலைக்கு சென்றுவிட்டதாகவும் நேற்று 6.30 மணியளவில் அறிக்கை வெளியானது.